புடினின் முக்கிய இராணுவ ஜெனரல் குண்டு வெடிப்பில் பலி !
மாஸ்கோவில் புடினின் முக்கிய இராணுவ ஜெனரல் கார் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தலைநகர் மாஸ்கோவில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் நடந்த கார் குண்டுவெடிப்பில் ரஷ்யாவின் முக்கிய பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஜெனரல் யாரோஸ்லாவ் மாஸ்காலிக் கொல்லப்பட்டுள்ளார்.
இது திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன 59 வயதான மாஸ்காலிக், ரஷ்ய இராணுவத்தின் பிரதான புலனாய்வு இயக்குநரகத்தில் பணியாற்றியதோடு, 2015-ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த உக்ரைன் தொடர்பான இராணுவ பேச்சுவார்த்தையிலும் பங்கேற்றிருந்தார்.
அதிகரிக்கும் நிலைமை
இத்தாக்குதல், 2022-ஆம் ஆண்டு நடைபெற்று ரஷ்ய தேசியவாதியான அலெக்சாண்டர் டூகினின் மகள் தாரியா டூகினா கொல்லப்பட்ட கார் குண்டுவெடிப்பை நினைவுபடுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதுபோன்று, இது ஒருவரை குறிவைத்து செய்யப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாஸ்கோவில் கடந்த சில நாட்களில் தொடர்ந்து நடந்த வெடிப்பு சம்பவங்கள், நகரத்தில் அதிகரிக்கும் நிலைமை மாறுதல்களை பற்றி கவலையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
