கியூ.ஆர் திட்டத்தில் புதிய மாற்றம் - அடுத்த வாரம் முதல் நடைமுறை! வெளியான அறிவிப்பு
தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டின்(கியூ.ஆர் திட்டத்தின்) கீழ் எரிபொருளைப் பெறும்போது அனுப்பப்படும் குறுஞ்செய்தியில் எரிபொருள் நிரப்பு நிலையக் குறியீடு இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த வாரம் முதல் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அமைச்சர் இந்த விடயத்தினை அறிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக பயன்படுத்துகின்றனர்
தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்தை (கியூ.ஆர்) சட்டவிரோதமாக பயன்படுத்துவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அடையாளம் காணப்பட்ட சில விசேட பிரிவினருக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த விஷேட பிரிவினர்கள் தனியார் மற்றும் பொதுத்துறையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும்,வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான எரிபொருள் அனுமதிச்சீட்டு அறிமுகம் மற்றும் வாகனம் அல்லாத பிரிவினருக்கான எரிபொருள் ஒதுக்கீட்டு அறிமுகம் அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
2) Fuel Station Code will be added to the SMS generated when obtaining Fuel to prevent the illegal use of NFP QR from next week. Automated reports for Fuel Station Dealers will made available from today. Dashboard to the public to be made available.
— Kanchana Wijesekera (@kanchana_wij) September 7, 2022

