மட்டக்களப்பில் தொடர்ச்சியான அடை மழை! உன்னிச்சை குள வான் கதவுகளும் திறப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் கடந்த 04 தினங்களான பரவலாக பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் மீண்டும் தாழ்நிலங்களை மழைநீர் சூழ்ந்துள்ளது.
இதனைவிட கிராமங்களின் உள்வீதிகளிலும் மழைநீர் வழிந்தோட முடியாமல் தேங்கியுள்ளதனால் மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வான் கதவுகள் திறப்பு
இதேவேளை, மட்டக்களப்பு கிரான் பாலத்தினை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதால் அவ்வீதியுடனான போக்குவரத்து விவசாய நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உன்னிச்னைக் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதனால் அதன் வான் கதவுகள் அரை அடிக்கு மேல் சகலதும் திறக்கப்பட்டுள்ளதாக அக்குளத்திற்கும் பொறுப்பான நீர்பாசன பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக குளத்தை அண்டிய பகுதிகளான வவுன தீவு பிரதேசத்தில் தாழ்வான நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் வயல் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |