நாட்டை பொறுப்பேற்று 5 ஆண்டுகளுக்குள் கட்டியெழுப்புவேன்
வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை பொறுப்பேற்க தயார் எனவும் 5 வருடங்களுக்குள் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே சஜித் பிரேமதாச இதனை கூறியுள்ளார்.
நாட்டை அழித்த ராஜபக்ச அரசாங்கம்
நாட்டில் அந்நிய செலாவணி கையிப்பானது 7 பில்லியன் டொலர்கள் வரை இருந்துடன் அதனை ராஜபக்ச அரசாங்கம் பூஜ்ஜிய நிலைமைக்கு கொண்டு சென்றது.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் நாட்டில் பெரும் பலத்தை பெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் இரண்டரை ஆண்டுளில் நாட்டை அழித்து முடித்து விட்டது.
சிறப்பாக இருந்த நாட்டை முற்றாக அழித்து விட்டனர். ஆனால், 2019 ஆம் ஆண்டு சிறப்பாக இருந்த நாடு வீழ்ந்து விட்டதாக கூறினர். நாடு எங்கும் வீழ்ந்து விடவில்லை.
நாட்டை கட்டியெழுப்ப தயார்
சிறப்பான மட்டத்தில் இருந்தது.
நாட்டில் 7 பில்லியன் டொலர்களுக்கும் மேல் அந்நிய செலாவணி கையிருப்பில் இருந்தது. பொதுஜன பெரமுனவின் ராஜபக்ச அரசாங்கம் நாட்டை அழித்து, அந்நிய செலாவணி கையிருப்பை பூஜ்ஜியமாக்கியது.
நாங்கள் பொறுப்பை ஏற்று சரிந்து வீழ்ந்துள்ள நாட்டை 5 ஆம் ஆண்டுகளுக்குள் கட்டியெழுப்புவோம், நான் பொய் சொல்ல மாட்டேன் எனவும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.