நாட்டை சீரழித்து பிளவை ஏற்படுத்தியவர்கள் ராஜபக்சக்களே : சஜித் பகிரங்கம்

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Sajith Premadasa Rajapaksa Family sl presidential election
By Sathangani Sep 07, 2024 12:14 PM GMT
Report

ராஜபக்சக்களே இந்த நாட்டை சீரழித்து நாட்டிற்குள் பிளவை ஏற்படுத்தியிருக்கின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஹோமாகமவில் (Homagama) ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 36ஆவது மக்கள் வெற்றி பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”ரணில் விக்ரமசிங்கவும் (Ranil Wickremesinghe), அநுர குமார திசநாயக்கவும் (Anura Kumara Dissanayake) புதிய அரசியல் திருமண விருந்து உண்ணுகின்றார்கள். இவர்கள் இருவருக்கும் நாட்டைக் கட்டி எழுப்ப வேண்டிய தேவை இல்லை.

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் : சஜித் அறிவிப்பு

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் : சஜித் அறிவிப்பு

நாட்டை சீரழித்தவர்கள் 

இவர்களில் ஒருவருக்கு மக்களின் இதயத்துடிப்பு தெரிவதில்லை. 220 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பு ஆசை, துன்பம், வேதனை, என்பவற்றையும் அறிவதில்லை. இவர்களில் மற்றவர் அனைத்தையும் சீரழிக்கின்ற எரியூட்டுகின்ற சமூக படுகொலைகளை முன்னிலைப்படுத்தி செயற்படுகின்றவர்.

நாட்டை சீரழித்து பிளவை ஏற்படுத்தியவர்கள் ராஜபக்சக்களே : சஜித் பகிரங்கம் | Rajapaksas Ruined The Sl And Created Division

200 ஆடைத் தொழிற்சாலைகளை உருவாக்குகின்ற பணி முன்னெடுக்கப்பட்ட போது துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பிரேமதாச உருவாக்கும் ஆடை தொழிற்சாலைகளை தீயிட்டு கொளுத்துவதாக எச்சரிக்கை விடுத்தவர்.

இந்த நாட்டை ராஜபக்சர்கள் சீரழித்து இந்த நாட்டிற்குள் பிளவை ஏற்படுத்தியிருக்கின்றார்கள். நாட்டை தீயிட்டு கொளுத்துகின்றவர்களுக்கு, கொலைகளை செய்கின்றவர்களுக்கு இந்த நாட்டைக் கட்டி எழுப்ப முடியாது.

யாழில் ரணிலுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட இரு அமைச்சர்கள்

யாழில் ரணிலுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட இரு அமைச்சர்கள்

அச்சம் ஏற்பட்டுள்ளது

ரணில் விக்ரமசிங்கவுக்கும் அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஐக்கிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்து நாட்டிற்கு சேவை செய்யும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

நாட்டை சீரழித்து பிளவை ஏற்படுத்தியவர்கள் ராஜபக்சக்களே : சஜித் பகிரங்கம் | Rajapaksas Ruined The Sl And Created Division

இந்தத் தேர்தலில் பிரிகோடு தெளிவாக விளங்குகின்றது. இந்த நாட்டிலுள்ள 220 இலட்சம் மக்களும் ரணில் விக்ரமசிங்கவினதும், அநுர குமார திசாநாயக்கவினதும் அரசியல் கூட்டை சரியாக விளங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் இருவரினது நோக்கம் சஜித் பிரேமதாசவை தோல்வி அடையச் செய்வதாகும்.

அவர்களின் நோக்கம் அப்படி இருந்தாலும், எமதும் ஐக்கிய மக்கள் சக்தியினதும், ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் பொதுவான நோக்கம் வீழ்ச்சி அடைந்திருக்கின்ற இந்த நாட்டை இந்த மிகப்பெரிய அனர்த்தத்தில் இருந்து மீட்டெடுத்து, சுபிட்சமான நாளைய தினத்திற்காக 220 இலட்சம் மக்களையும் முன்னெடுத்துச் செல்வது“ என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

இலவசக் கல்வி - சுகாதாரம் நாட்டின் அடிப்படை உரிமையாக்கப்படும்: சஜித் உறுதி!

இலவசக் கல்வி - சுகாதாரம் நாட்டின் அடிப்படை உரிமையாக்கப்படும்: சஜித் உறுதி!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015