கோட்டாபய எடுத்த தீர்மானம் தவறு - ரணிலுக்கு அதிகாரம் இல்லை -சுமந்திரன் அதிரடி
Gotabaya Rajapaksa
M A Sumanthiran
Ranil Wickremesinghe
Sri Lankan political crisis
By Jaso
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்த அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவின் தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
"அரச தலைவர் முற்றாக சட்டபூர்வமான தன்மையை இழந்துவிட்டார், மக்கள் அவர் வீட்டிற்கு செல்ல வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர். மேலும் அவர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணைக்கு நாடாளுமன்றம் விரைவில் வாக்களிக்கவுள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆரம்பத்திலிருந்தே தற்போதைய நாடாளுமன்றத்தில் சட்டபூர்வத்தன்மை இல்லை. அவர் தனது தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்து பத்திரிகைக்கு அளித்த செவ்வியிலேயே இதனைத் தெரிவித்தார்.