இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பில் மனுதாக்கல் : பிரதிவாதியாக பெயரிடப்பட்ட ரணில்

Ranil Wickremesinghe Sri Lanka Passport
By Shalini Balachandran Nov 07, 2024 02:10 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு கடந்த அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) குறிப்பிடப்பட்டுள்ளார்.

எபிக் லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தாக்கல் செய்த மனுவின் மீது நேற்று (06.11.2024) நடைபெற்ற விசாரணையின் போதே ரணில் விக்ரமசிங்க பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

குறித்த விசாரணையின் போது, பிரதிவாதிகளாக பெயரிடப்பட்ட இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், ஐந்து மில்லியன் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்வதற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவின் மூலம் தமது வாடிக்கையாளர்களுக்கு கடுமையான பாரபட்சம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இடியுடன் கூடிய கனமழை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இடியுடன் கூடிய கனமழை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நீதிமன்றத்திடம் கோரிக்கை 

எனவே, தடையை நீக்க உத்தரவு பிறப்பிக்குமாறு நீதிமன்றத்திடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பில் மனுதாக்கல் : பிரதிவாதியாக பெயரிடப்பட்ட ரணில் | Ranil Named Respondent Connection With E Passport

அத்தோடு, மனுதாரர் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி, கேள்விக்குரிய கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கையானது முறைசாரா கொள்முதல் முறையின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

வவுனியாவில் தேர்தல் விதிமுறைகளை மீறிய வேட்பாளர்களின் வாகனங்கள் தடுத்து வைப்பு

வவுனியாவில் தேர்தல் விதிமுறைகளை மீறிய வேட்பாளர்களின் வாகனங்கள் தடுத்து வைப்பு

பிறப்பிக்கப்பட்ட தடை

இதனுடன்,  பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்குவதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பில் மனுதாக்கல் : பிரதிவாதியாக பெயரிடப்பட்ட ரணில் | Ranil Named Respondent Connection With E Passport

இந்தநிலையில், சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு, கடவுச்சீட்டுக்களை வழங்குவதை தடுக்கும் தடையை நீக்கக் கோருவது தொடர்பிலான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், தடையை நீக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்த உண்மைகளை பரிசீலிப்பதற்காக டிசம்பர் ஒன்பதாம் திகதி மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : அரசாங்கத்தின் அடுத்தகட்ட நகர்வு

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : அரசாங்கத்தின் அடுத்தகட்ட நகர்வு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                                
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025