இந்திய - இலங்கை உறவில் முக்கிய புள்ளியாக மாறிய ரணில்
சிறிலங்கா அதிபரின் இந்தியாவிற்கான விஜயத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் மோஹன் குவத்ரா கூறியுள்ளார்.
இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் மோஹன் குவத்ரா நேற்று(11) மாலை மீண்டும் டெல்லி திரும்பியுள்ளார்.
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க விரைவில் இந்தியாவுக்கு அரச முறை பயணமாக செல்லவுள்ள நிலையில், இந்தப்பயணம் தொடர்பான ஏற்பாடுகளுக்காக இலங்கைக்கு வந்த அவர் சிறிலங்கா அதிபர் உள்ளிட்ட தரப்பினரைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
மறுசீரமைப்பு வேலைத்திட்டம்

இதன்போது, இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்காக சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்துவரும் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் மோஹன் குவத்ராவிற்கு சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெளிவுபடுத்தியுள்ளார்.
தனது இலங்கை விஜயம் தொடர்பில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், “சிறிலங்கா அதிபர், இந்தியாவிற்கு மேற்கொள்ளவிருக்கும் விஜயத்துக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதே எனது விஜயத்தின் நோக்கமாகும்.
சிறிலங்கா அதிபரின் இந்திய விஜயமானது, இருதரப்பு உறவில் நேர்மறையான மாற்றமொன்றின் புள்ளி என்பதனை உறுதிப்படுத்துவதற்கான முயற்சியாகவே அமைந்தன.
பொருளாதார பங்குடைமை

| ரணிலின் புதுடில்லி பயண ஏற்பாடுகளை ஆராய இந்திய இராஜதந்திரி இலங்கை வருகை |
இந்த விஜயத்துக்கு முன்னதாக எம்மால் முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஒத்துழைப்பு நடவடிக்கைகளின் முக்கிய விடயங்கள், விஜயத்தின் போதான செயற்பாடுகள், இலங்கை தலைமைத்துவத்தின் முன்னுரிமைகள் ஆகியவை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
உறவின் பலம், உறவினை அடிப்படையாகக் கொண்ட ஒத்துழைப்பின் பல்வேறு கூறுகள், இந்தியாவும் இலங்கையும் அனுபவிக்கும் பொருளாதார பங்குடைமை முழுவதும் எதிர்வரும் ஆண்டுகளில் காணப்படும் முக்கிய கூறுகள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
சிறிலங்கா அதிபரின் இந்திய விஜயத்தின் வெற்றியினை உறுதிப்படுத்துவதே எமது பிரதான இலக்காகும்.
அவரது விஜயத்தை வெற்றிகரமான ஒன்றாக மாற்றவும் அவ்வழியில் தங்கள் உறவை வெற்றியடையச் செய்யவும் தாம் எதிர்பார்ப்பதாக” அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026