zoom தொழிநுட்பம் வழியாக வழக்கு விசாரணையில் இணைந்த ரணில்

Ranil Wickremesinghe Colombo National Hospital Ranil Wickremesinghe Arrested
By Sathangani Aug 26, 2025 10:01 AM GMT
Report

புதிய இணைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க zoom தொழிநுட்பம் வழியாக வழக்கு விசாரணையில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை தற்போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்க, சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளால் zoom தொழிநுட்பம் மூலம் கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

அத்துடன் விசாரணையின் போது, ​ரணில் விக்ரமசிங்கவின் விரிவான மருத்துவ அறிக்கையை அவரது வழக்கறிஞர்கள் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு சற்றுமுன்னார் zoom மூலம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

பொது நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தொடர்பான சட்ட நடவடிக்கைகள் சற்றுமுன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி காவல்துறை, காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் கலகக் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தற்போது கடுமையான பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

zoom தொழிநுட்பம் வழியாக வழக்கு விசாரணையில் இணைந்த ரணில் | Ranil To Appear In Court Via Zoom

உத்தியோகபூர்வ விஜயம் செய்ததாகக் கூறி தனிப்பட்ட விஜயத்தில் ஈடுபட்டதன் மூலம் பொது நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஓகஸ்ட் 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இன்று வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

முன்னாள் ஜனாதிபதி அங்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அவர் தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்காக கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைக்கப்படவிருந்த போதிலும், அவரது உடல்நிலை மோசமடைந்ததால் நீதிமன்றத்தில் முடியாது என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (26) நீதிமன்றத்தில் முன்னிலையாக மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) அவரது உடல்நிலை காரணமாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள் குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, நீதிமன்றம் தெரிவித்தால், இன்று (26) நடைபெறும் நடவடிக்கைகளில் அவரை zoom மூலம் இணைக்க சிறைச்சாலைகள் துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டு இன்று வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க, உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உச்சக்கட்ட பரபரப்பில் ரணிலின் வழக்கு - நீதிமன்றில் குவியும் அரசியல்வாதிகள்

உச்சக்கட்ட பரபரப்பில் ரணிலின் வழக்கு - நீதிமன்றில் குவியும் அரசியல்வாதிகள்

பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க மீதான வழக்கு இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

zoom தொழிநுட்பம் வழியாக வழக்கு விசாரணையில் இணைந்த ரணில் | Ranil To Appear In Court Via Zoom

இந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள், கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிய பகுதிகளில் இன்று (26) காலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீதித்தடையை உடைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிமன்றுக்குள் செல்ல முயற்சி

வீதித்தடையை உடைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிமன்றுக்குள் செல்ல முயற்சி

நீதிமன்றத்தினுள் நிரம்பி வழியும் ரணில் தரப்பு சட்டத்தரணிகள்

நீதிமன்றத்தினுள் நிரம்பி வழியும் ரணில் தரப்பு சட்டத்தரணிகள்


  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்