செயலிழந்தது சிறிலங்காவின் அரச இயந்திரம்- பகிரங்கப்படுத்தினார் ரணில்!
sri lanka
people
government
Ranil Wickremesinghe
By Thavathevan
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு அரசியல்வாதிகளிடமிருந்து பதில் கிடைக்குமா இல்லையா என்ற விடயம் தொடர்பாக மக்கள் சிந்தித்து வருவதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டம் ஒன்றில் முன்னாள் பிரதமர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சௌபாக்கிய நோக்குக் கொள்கை அறிக்கையை வாசித்த மக்கள் இந்த அரசாங்கம் தொடர்பில் விசேட எதிர்பார்ப்பைக் கொண்டிருந்ததுடன், நாடு புதிய பாதையில் பயணிக்கும் என எதிர்பார்த்தனர். எனினும் தற்போது அரச இயந்திரம் இயங்காத நிலைமைக்கு வந்துள்ளது.
இரண்டாம் உலகப் போர் காலத்திலும் இப்படியான நிலைமை இருக்கவில்லை என பழையவர்கள் கூறியுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 2 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்