இன்று முதல் ரணிலுக்கு புதிய அதிகாரம்
சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் இன்று (20) நள்ளிரவுக்குப் பின்னர் கிடைக்கப்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அரசியலமைப்பின் 70 (1) உட்பிரிவின் பிரகாரம் அதிபருக்கு நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அரசியலமைப்பின் 70 (1) (அ) உறுப்புரையின் பிரகாரம், தற்போதைய நாடாளுமன்றம் முதல் முறையாக கூடுவதற்கு நியமிக்கப்பட்ட திகதியிலிருந்து இரண்டு ஆண்டுகள் 6 மாதங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதியில், நாடாளுமன்றத் தீர்மானம் மூலம் கோராதபட்சத்தில் அதிபரால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது என கூறப்பட்டுள்ளது.
முதல் அமர்வு

இதற்கமைய முன்னாள் அதிபர் கோட்டாபாய ராஜபக்சவின் தலைமையில், ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு 2020 ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி கூட்டப்பட்டது.
குறித்த முதல் அமர்வு இடம்பெற்று இன்று (20) நள்ளிரவுடன் இரண்டு வருடங்களும் ஆறு மாதங்கள் நிறைவடைகின்றது.
எனவே, கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகலின் பின்னர் அரசியலமைப்பு ரீதியாக சிறிலங்காவின் அதிபரான ரணில் விக்ரமசிங்கவுக்கு, அரசியலமைப்பின் 70 (1) (அ) உறுப்புரையின் பிரகாரம் நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா