வீதித்தடையை உடைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிமன்றுக்குள் செல்ல முயற்சி

Ranil Wickremesinghe Supreme Court of Sri Lanka Sri Lanka Magistrate Court Ranil Wickremesinghe Arrested
By Thulsi Aug 26, 2025 10:53 AM GMT
Report

புதிய இணைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்குக்கு தொடர்பில் நீதிமன்றுக்கு முன் குவிந்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் பாரிய எதிர்ப்பு கோசங்களை எழுப்பி வருகின்றமையினால் மிகவும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட குழுவினரும் கலந்துக்கொண்டு தமது எதிர்பை வெளியிட்டு வருகின்றனர்.

இதன்போது, “அநுர கோ ஹோம்” என்ற கூச்சல்களோடு ஆதரவாளர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

மேலும், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், கொழும்பு தேசிய வைத்தியசாலை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பெலவத்த ஜேவிபியின் தலைமைக் காரியாலயம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் இணைப்பு

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குழுவினர் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது போத்தலைக் கொண்டு கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன் காரணமாக, காவல்துறையினர் அதிகாரி ஒருவரின் முகத்தில் கடுமையான காயம் ஏற்பட்டு இரத்தம் வழிகிறது.

வீதித்தடையை உடைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிமன்றுக்குள் செல்ல முயற்சி | Ranils Arrest Security Tightened Fort Magistrate


இரண்டாம் இணைப்பு

கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி ஆர்ப்பாட்டக்காரர்கள் குவிந்துள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு ரணில் விக்ரமசிங்கவுக்கான ஆதரவை கோரி எதிர்க்கட்சிகள் ஒன்றாக திறளவுள்ளதாக அறிவித்துள்ள பின்னிணில் ஆதரவாளர்கள் தமது ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

அத்தோடு, கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று (26) காலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வீதித்தடையை உடைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிமன்றுக்குள் செல்ல முயற்சி | Ranils Arrest Security Tightened Fort Magistrate

வீதித்தடையை உடைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிமன்றுக்குள் செல்ல முயற்சி | Ranils Arrest Security Tightened Fort Magistrate

வீதித்தடையை உடைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிமன்றுக்குள் செல்ல முயற்சி | Ranils Arrest Security Tightened Fort Magistrate

வீதித்தடையை உடைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிமன்றுக்குள் செல்ல முயற்சி | Ranils Arrest Security Tightened Fort Magistrate

முதலாம் இணைப்பு

கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க மீதான வழக்கு இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

நீதிமன்ற வளாகத்தில் மக்கள் கூட்டம் கூடும் என்பதால் நீதிமன்றத்தை அண்டிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கபட்டுள்ளன.

உச்சக்கட்ட பரபரப்பில் ரணிலின் வழக்கு - நீதிமன்றில் குவியும் அரசியல்வாதிகள்

உச்சக்கட்ட பரபரப்பில் ரணிலின் வழக்கு - நீதிமன்றில் குவியும் அரசியல்வாதிகள்

கடுமையான சோதனை

குறித்த பகுதியில் காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு பணிகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீதித்தடையை உடைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிமன்றுக்குள் செல்ல முயற்சி | Ranils Arrest Security Tightened Fort Magistrate

நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைபவர்களின் வழக்கு எண்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களது பயணப் பொதிகள் மற்றும் நபர்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

மேலும், கியூ வீதியில் வசிப்பவர்கள் மற்றும் சட்டத்தரணிகள் மட்டுமே அந்த வீதிக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.

எனினும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை காரணமாக, அவரை இன்று (26) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

You may like this

ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது : சிறைச்சாலைகள் ஆணையாளர்

ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது : சிறைச்சாலைகள் ஆணையாளர்

எதிர்க்கட்சிகளை மீண்டும் ஒன்றிணைத்த அநுர - நன்றி கூறும் பொதுச் செயலாளர்

எதிர்க்கட்சிகளை மீண்டும் ஒன்றிணைத்த அநுர - நன்றி கூறும் பொதுச் செயலாளர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   



ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025