எதற்கும் தயார் - மகிந்த வெளியிட்ட அறிவிப்பு
Mahinda Rajapaksa
Sri Lanka Podujana Peramuna
Election
By Sumithiran
பொதுஜன பெரமுன எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் தேர்தலுக்கு நாங்கள் தயார்
எந்தவொரு சந்தா்ப்பத்திலும் தேர்தலுக்கு நாங்கள் தயார். அதிபர் தேர்தலுக்கும் கூட நாங்கள் தயார் என அவா் தொிவித்துள்ளாா்.
இதன்போது இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை நிறுவனங்கள் மற்றும் ஒலிபரப்பு அதிகாரசபை சட்டமூலம் தொடர்பிலும் மகிந்த ராஜபக்ச கருத்து வெளியிட்டார்.
ஊடக சுதந்திரம்
நாங்கள் இன்னும் அதனை பார்க்கவில்லை, தற்போது ஊடக சுதந்திரம் உள்ளது தானே என அவா் கேள்வியெழுப்பியுள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்