ரஷ்யாவின் புதிய தாக்குதல்! உக்ரைன் ராணுவ தளபதியின் அறிவிப்பு
வடக்கு திசையிலிருந்து ரஷ்யா புதியதொரு தாக்குதலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உக்ரைன் படைகள் தயாராகி வருவதாக உக்ரைனின் தலைமை ராணுவ தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி தெரிவித்துள்ளார்.
எனினும், தலைநகர் கீவ்வை நோக்கி ரஷ்யப் படைகள் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், அண்டை நாடான பெலாரஸிலிருந்து தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவு எனக் கூறியுள்ளார்.
ரஷ்யா புதிய தாக்குதல்
உக்ரைன் போரில் பெலாரஸ் அதிக பங்களிப்பை வழங்குமாறு ரஷ்யா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக உக்ரைன் கடந்த சில வாரங்களாகக் குற்றம் சாட்டி வந்த நிலையில், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

Image Credit: Bloomberg.com
பல்வேறு தரவு ஆதாரங்களின்படி, ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பிராந்தியப் பகுதியிலிருந்து உக்ரைனின் வடக்கு நோக்கி ரஷ்யா புதிய தாக்குதல்களைத் தொடுப்பதே மிகவும் சாத்தியமான சூழ்நிலையாக தெரிவதாக கூறிய சிர்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ரஷ்யா கடந்த 2022 பெப்ரவரி படையெடுப்பின் போது கீவ்வை நோக்கமாகக் கொண்டு முன்னேற முயற்சித்தது போல, தற்போதைய நடவடிக்கையின் நோக்கம் தலைநகரைக் கைப்பற்றுவதாக இருக்காது என்றும் அவர் விளக்கியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
2 நாட்கள் முன்