குறிகாட்டுவான் இறங்குதுறை புனரமைப்பு: இரண்டாம் கட்ட வேலைத்திட்டம் ஆரம்பம்
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் குறிகாட்டுவான் இறங்குதுறையினை புனரமைப்பு செய்வதற்கான இரண்டாம் கட்ட வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்தாயக்கவினால் குறித்த திட்டத்திற்கான பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டது.
குறித்த திட்டமானது 984.03 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படும் நிலையில் எதிர்வரும் ஒக்ரோபர் 27 ஆம் திகதி இதன் வங்கிகள் யாவும் நிறைவடையவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
பிமல் ரத்நாயக்க
இதன்போது உரையாற்றிய பிமல் ரத்நாயக்க,
“தீவுப்பகுதியில் பெற்றோல் செற் ஒன்றினை அமைப்பதற்காக முயற்சி ஒன்றினை மேற்கொண்டு வருகிறோம். இறங்குதுறையின் பணிகள் நிறைவடைந்ததும் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பு வேறு அரசு யாழ்ப்பாணம் வேறு அரசாங்கம் அல்ல. அதே அரசாங்கம் தான் இங்கும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க வேண்டும்.
அரச உத்தியோகத்தர்கள் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக பணியாற்ற வேண்டும். அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் நாம் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
வடக்கு மாகாணம் முழுவதும் வீதிகளைப்புனரமைப்புக்கு 2000 கோடி வரையில் ஒதுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண அபிவிருத்திகள் அனைத்தும் இழுத்தடிக்கப்பட்ட நிலையில் காணப்படும் நிலையில் அதனை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.
வடக்கு, கிழக்கு என்ற பாகுபாடின்றி அனைதது இனத்தவரும் வருகைதரும் இவ்விடத்தினை புனரமைப்பு செய்தல் அவசியமாகிறது” என தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


