யாழில் இளைஞர் ஒருவரிடம் சிக்கிய பெருமளவு போதை பொருட்கள்
யாழில் (Jaffna) பெருமளவு போதை மாத்திரைகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த போதை மாத்திரைகள் யாழ், சுன்னாகம் பகுதியில் இன்று (08) இரவு கைப்பற்றப்பட்டுள்ளன.
யாழ் காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் சுன்னாகம் விசேட காவல்துறை புலனாய்வு பிரிவினரால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போதை மாத்திரை
சுன்னாகம் நகர்பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனைக்கு இளைஞர் ஒருவர் எடுத்து வருவதாக குறித்த பிரிவினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைவாக சம்பவ இடத்திற்கு விரைந்த பிரிவினர் 500 போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.
தொடர்ந்து 25 வயதான சுன்னாகம் காவல் பிரிவிற்குட்பட்ட இளைஞர் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து, குறித்த சந்தேக நபருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
