ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு
இலங்கை ஆசிரியர் சேவைக்கு தேசிய கற்பித்தல் அறிவியல் டிப்ளோமாதாரிகள் ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பானது, கல்வி அமைச்சினால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, இதன்படி, 2020/2022 கல்வியாண்டில் தேசிய கல்வியியல் கல்லூரிகளில் பாடநெறிகளை முடித்த பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கான தகவல் சேகரிப்பு நிகழ்நிலையில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்கள்
அதன்படி, புலமைப்பரிசில் பெறுபவர்கள் நேற்று (20) முதல் எதிர்வரும் (28) ஆம் திகதி வரை teacher.moe.gov.lk என்ற இணைப்பின் ஊடாக அறிவுறுத்தல்களின்படி விண்ணப்பிக்கலாம் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.moe.gov.lk ஐப் பார்வையிடுவதன் மூலம் பெறலாம் என்று அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்