அரச தொழிலுக்காக காத்திருப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கையின் அரச சேவையில் நிலவும் 15,839 புதிய ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் அமைச்சுக்கள் மற்றும் மாகாண சபைகளில் நீண்டகாலமாக நிலவி வரும் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரதமரின் செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு
2024 டிசம்பர் 30 அன்று அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட இந்தக் குழு, பொதுச் சேவையின் அத்தியாவசியத் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளை ஆய்வு செய்து இந்த அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தது.

அதிகப்படியான ஆட்சேர்ப்புக்கள் பாதுகாப்பு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களில் இடம்பெறவுள்ளதாகவும் முக்கிய அமைச்சுக்களின் விபரங்கள் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சில் 9,794 வெற்றிடங்களும், பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சில் 1,915 வெற்றிடங்களும், சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் 776 வெற்றிடங்களும், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சில் 339 வெற்றிடங்களும் காணப்படுகின்றன.
வடக்கு மாகாண சபை
அத்துடன் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் 300 வெற்றிடங்களும், நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் அபிவிருத்தி அமைச்சில் 214 வெற்றிடங்களும், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சில் 67 வெற்றிடங்களும் நிலவுகின்றன.

மேலும் மாகாண சபைகளிலும் கணிசமான அளவில் வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ள நிலையில் மாகாண சபைகளுக்கான ஒதுக்கீடு இவ்வாறு அமைந்துள்ளது.
வட மாகாண சபையில் 411 வெற்றிடங்களும், வடமேல் மாகாண சபையில் 401 வெற்றிடங்களும், கிழக்கு மாகாண சபையில் 282 வெற்றிடங்களும், சபரகமுவ மாகாண சபையில் 236 வெற்றிடங்களும், ஊவா மாகாண சபையில் 146 வெற்றிடங்களும் நிரப்பப்படவுள்ளன.
இந்தப் பாரிய ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது பொதுச் சேவையின் வினைத்திறனை அதிகரிப்பதுடன், அரச நிர்வாகக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |