அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை மீண்டும் குறைப்பு - இன்று முதல் நடைமுறை
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லங்கா சதொச நிறுவனம் ஆறு அத்தியாவசியப் பொருட்களுக்கான விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
புதிய விலை
இதன்படி ஒரு கிலோ கிராம் வெள்ளைப்பூடு 60 ரூபாவால் குறைக்கப்பட்டு 490 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
கோதுமை மா 55 ரூபாவால் குறைக்கப்பட்டு 320 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
நெத்தலி 50 ரூபாவால் குறைக்கப்பட்டு 1450 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
வெள்ளைச் சீனி 15 ரூபாவால் குறைக்கப்பட்டு 260 ரூபாவுக்கு விற்பனை செய்யபடவுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி ஐந்து ரூபாவால் குறைக்கப்பட்டு 169 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.
பருப்பு 30 ரூபாவால் குறைக்கப்பட்டு 285 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.
மொத்த விற்பனை விலை
இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் அரிசி, சீனி, கோதுமை மற்றும் பருப்பு ஆகியவற்றின் மொத்த விற்பனை விலை வெளியாகியுள்ளது.
புறக்கோட்டை மொத்த விற்பனையாளர் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
இன்றைய நிலவரத்திற்கு அமைய சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 360 ரூபா முதல் 375 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.
சீனி ஒரு கிலோகிராம் 238 ரூபா முதல் 240 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.
வெள்ளைப்பச்சை அரிசி ஒரு கிலோகிராம் 145 ரூபா முதல் 150 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.
பொன்னி சம்பா ஒரு கிலோகிராம் 175 ரூபா முதல் 185 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.
நாடு அரிசி ஒரு கிலோகிராம் 160 ரூபா முதல் 170 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.
கோதுமை ஒரு கிலோகிராம் 260 ரூபா முதல் 270 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.
வெள்ளைபூடு ஒரு கிலோகிராம் 390 ரூபா முதல் 400 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.
