இராணுவத்தை வெளியேற்றிய பின் நிதி வழங்குங்கள் - ஐ.எம்.எப் க்கு எதிராக தாயகத்தில் போராட்டம்!

International Monetary Fund Missing Persons Sri Lankan Tamils Government Of Sri Lanka
By Mohankumar Jun 08, 2023 08:51 AM GMT
Mohankumar

Mohankumar

in சமூகம்
Report

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் ஆரம்பித்து 2300 ஆவது நாளான இன்று பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் உள்ள கொட்டகையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் தலைவி பதவி விலகக்கோரி பாதாகையையும் காட்சிப்படுத்தியிருந்தனர்.

தமிழருக்கு எதிரான ஆக்கிரமிப்பு 

இராணுவத்தை வெளியேற்றிய பின் நிதி வழங்குங்கள் - ஐ.எம்.எப் க்கு எதிராக தாயகத்தில் போராட்டம்! | Relatives Of Missing Persons Sl Protest Today

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது சங்க செயலாளர் கோ. ராஜ்குமார் கருத்து தெரிவிக்கையில்,

“காணாமல் ஆக்கப்பட்டோரின் தமிழ் தாய்மார்கள் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவை இராஜினாமா செய்யுமாறு வேண்டுகிறோம். 

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா  ஜோர்ஜீவாவின் கீழ், சிறிலங்காவிற்கு சர்வதேச நாணய நிதியுதவி, சிறிலங்காவில் தமிழருக்கு எதிரான ஆக்கிரமிப்பு மற்றும் ஒடுக்குமுறைக்கு ஆதரவை வழங்குகிறது.

கடனுக்கு முன்பிருந்ததை விட, சிறிலங்காவில் ஆக்கிரமிப்பு மற்றும் அடக்குமுறையால் தமிழர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உணவு, மருந்து, சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் பல தேவைகளுக்காக சிறிலங்கா சில மாதங்களுக்கு முன்பு பிச்சை எடுத்துக்கொண்டிருந்தது.

இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் கடனுடன், தமிழர்களின் நிலத்தில் இனப்படுகொலை நடவடிக்கைகளை துரிதப்படுத்துகிறது. 

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவிக்கு பின்னர், சிறிலங்கா இராணுவமும் பௌத்த பிக்குகளும் சட்டவிரோதமாக தமிழர்களிடமிருந்து நிலங்களை அபகரித்து, பௌத்த சிங்களவர்கள் வசிக்காத தமிழர்களின் தாயகம் முழுவதும் மகா சங்க சிங்கள பௌத்த சின்னங்களை கட்டியுள்ளனர்.

இந்த சர்வதேச நாணய நிதிய கடன் பண்டைய இந்துக் கோவில்களை அழிக்க பண பலத்தை வழங்கியது மற்றும் இந்த அழிக்கப்பட்ட கோவில்கள் சிங்கள இனவாத பௌத்த சின்னங்களால் மாற்றப்பட்டது.

இந்த பௌத்த சின்னம் தமிழர்களால் வெறுக்கப்படுகிறது, ஏனெனில் இந்த சின்னம் இன அழிப்பு மற்றும் தமிழ் தாயகத்தில் தெற்கிலிருந்து சிங்களர்களின் குடியேற்றத்தை குறிக்கிறது.

கடந்த கால படுகொலைகள்

இராணுவத்தை வெளியேற்றிய பின் நிதி வழங்குங்கள் - ஐ.எம்.எப் க்கு எதிராக தாயகத்தில் போராட்டம்! | Relatives Of Missing Persons Sl Protest Today

கடந்த கால படுகொலைகள், குறிப்பாக 2009 இனப் போரின் இறுதி நாட்களில் 146,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர், 90,000 தமிழ் விதவைகளையும் 50,000 தமிழ் ஆதரவற்றோரை உருவாக்கியது என்பதை மேலும் நினைவூட்டுகிறது.

தமிழர்களின் தாயகத்தில் சிறிலங்கா இராணுவத்தின் பிரசன்னம் சர்வதேச நாணய நிதியத்தின் கடனினால் மேலும் ஊக்குவிக்கப்பட்டது.

இந்த இராணுவங்கள் தமிழ் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள்களை ஊக்குவிப்பதும், தமிழர்களிடையே பாலுறவு தூண்டுதலை வலுப்படுத்தும் செயல்களும் எதிர்கால தமிழ் சந்ததியை அழிக்கின்றது.

ஹிலரி கிளின்டன்

இராணுவத்தை வெளியேற்றிய பின் நிதி வழங்குங்கள் - ஐ.எம்.எப் க்கு எதிராக தாயகத்தில் போராட்டம்! | Relatives Of Missing Persons Sl Protest Today

2009 ஆம் ஆண்டு, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்டன் தனது பதவிக்காலத்தில் சிறிலங்காவிற்கான சர்வதேச நாணய நிதியத்தின் கடனை எதிர்த்தார்.

2009 இல் இராஜாங்கச் செயலாளர் கிளின்டனின் காரணம், "இந்த இன பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை சர்வதேச நாணய நிதிய கடனை கருத்தில் கொள்வது பொருத்தமான நேரம் அல்ல என்று நாங்கள் நினைக்கிறோம். ஒரு தீர்வு கொண்டு வருவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்." என்றார்.

தமிழர்களின் தாயகத்தில் இருந்து சிறிலங்கா இராணுவத்தை அகற்றி, ஐ.நா அல்லது அமெரிக்கப் படைகளால் மாற்றப்படாவிட்டால், சர்வதேச நாணய நிதியத்தின் கடன்கள் நிறுத்தப்பட வேண்டும்.

இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா சிங்கள ராணுவத்தை தமிழர் தாயகத்தில் இருந்து அகற்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் சிறிலங்கா அரசுக்கு நிதியளிப்பது மனித உரிமை மீறலாகும்.

சர்வதேச நாணய நிதியம்

இராணுவத்தை வெளியேற்றிய பின் நிதி வழங்குங்கள் - ஐ.எம்.எப் க்கு எதிராக தாயகத்தில் போராட்டம்! | Relatives Of Missing Persons Sl Protest Today

சர்வதேச நாணய நிதியம் என்பது ஜனநாயகத்தை ஆதரிக்கவும், உலக முழுவதும் மனித உரிமைகளை நிலைநிறுத்தவும் நிதிக் கடன்களைப் பயன்படுத்த உருவாக்கப்பட்டது.

சிறிலங்காவில் தமிழர்கள் பகுதியில் பல மனித உரிமை மீறல்கள், ஊழல் நிறைந்த நீதித்துறை மற்றும் ஜனநாயகம் அல்லது மக்களின் கருத்துகளுக்கு மதிப்பில்லை.

சர்வதேச நாணய நிதியம் தமிழர்களின் சுதந்திரத்தை அழித்து மற்றும் அவர்களின் சொந்த மண்ணில் தமிழர்களின் இருப்பை அழிக்க சிறிலங்காவிற்கு உதவுகிறது.

எனவே சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவை உடனடியாக பதவி விலகுமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.” எனத் தெரிவித்தார்.   

ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025