சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் : சஜித் அறிவிப்பு

Colombo Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Sathangani Sep 07, 2024 11:42 AM GMT
Report

சிறிலங்கா அரசாங்கம் அக்கறை செலுத்தியிருந்தால் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (Colombo) நேற்று (06) இடம்பெற்ற நுண், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுடனான கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”எமது நாட்டின் தேசிய உற்பத்திக்கு 50 வீதத்துக்கு அதிகமான பங்களிப்பை வழங்குகின்ற சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் தொழில் முனைவோர்கள் குறித்து அவதானம் செலுத்தப்படுகின்ற முதல் சந்தர்ப்பம் இதுவல்ல.

அரச உத்தியோகத்தர்களின் பெரும்பான்மையானவர்களின் வாக்கு ரணிலுக்கு: வெளியாகியுள்ள தகவல்

அரச உத்தியோகத்தர்களின் பெரும்பான்மையானவர்களின் வாக்கு ரணிலுக்கு: வெளியாகியுள்ள தகவல்

நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளோம்

2020 இல் ஆரம்பம் முதலே சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களும் தொழில் முனைவோர்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் குரல் எழுப்பி உள்ளோம்.

அதனால்தான் இந்த பிரச்சினையை முறையான கலந்துரையாடலின் பக்கம் இட்டுச்செல்ல முடிந்துள்ளதோடு, அரசாங்கத்தினதும் பொறுப்புக்கூறக் கூடியவர்களின் கொள்கை திட்டங்களை வகுக்கின்றவர்களின் அவதானத்தின் பாலும் இட்டுச்செல்ல முடிந்துள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் : சஜித் அறிவிப்பு | Relief Can Be Provided To Small And Medium Traders

இந்தத் துறை குறித்து அக்கறை செலுத்துகின்ற வர்த்தகர்களுடன் பல சந்தர்ப்பங்களில் நான் கலந்துரையாடி இருக்கின்றேன்.

நாடு வங்குரோத்தடைந்தமையினால் ஏதேனும் ஒரு வகையில் நிவாரணங்களை வழங்குகின்ற சர்வதேச நாணய நிதியத்தை (IMF) சந்திக்க முடியாமல் இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் ஊடாக ஆசிய அபிவிருத்தி வங்கியின்  (ADB) இந்த நாட்டுக்கான பிரதானியையும், உலக வங்கியையும் (World Bank), சர்வதேச நாணய நிதியத்தின் ஐரோப்பிய சங்கத்திற்கான தூதுவர்களிடம் நேரடியாக எமது பிரச்சினையை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது.

இந்த அரசாங்கம் செய்யாததை ஐக்கிய மக்கள் சக்தி (SJB) செய்திருக்கின்றது. சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் வீழ்ந்திருந்திருக்கின்ற பாதாளத்தில் இருந்து மீட்டெடுப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஊடாக 100 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள முடியுமாக இருந்தது.

யாழில் மக்களை அச்சுறுத்திய அநுர : முஜிபூர் ரஹ்மான் குற்றச்சாட்டு

யாழில் மக்களை அச்சுறுத்திய அநுர : முஜிபூர் ரஹ்மான் குற்றச்சாட்டு

பொருளாதார அபிவிருத்தி

எதிர்க்கட்சி என்ற வகையில் இதனைப் பெற்றுக் கொள்வதற்கு அனுசரணையாளராக செயற்பட முடிந்ததது. அத்தோடு இதனை விடவும் அரசாங்கம் இன்னும் அக்கறை செலுத்தி இருந்தால், இந்நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு முக்கியமான ஆதாரமாக இருக்கின்ற சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்காக அதிகமாக ஏதேனும் செய்திருக்கலாம்.அது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் : சஜித் அறிவிப்பு | Relief Can Be Provided To Small And Medium Traders

அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டி இருந்த போதும் அன்று அதனை காண முடியவில்லை. இன்றும் அதேபோன்று சந்தர்ப்பவாதத்தை வைத்தே செயற்படுகின்றது. உண்மையான வெளிப்படை தன்மையும் உணர்வும் அரசாங்கத்திடம் இல்லை.

இது குறித்து அரசாங்கத்திடம் கூறியபோது அவர்களுக்காக தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியாது. வங்கி கட்டமைப்பே வீழ்ச்சி அடையும் என அரசாங்கம் கூறியது.

வங்கிக் கட்டமைப்பின் சேமிப்பாளர்களாக இந்த வர்த்தகர்களே இருக்கின்றார்கள். இவர்களினால் வங்கிக் கட்டமைப்பு இலாபம் அடைந்தாலும், அதனை மறந்த அரசாங்கம் இவர்களை நிராகரித்தது” என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் எம்.பியிடம் 500 மில்லியன் நட்டஈடு கோரியுள்ள மனுஷ நாணயக்கார

முன்னாள் எம்.பியிடம் 500 மில்லியன் நட்டஈடு கோரியுள்ள மனுஷ நாணயக்கார


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015