இலங்கை ஏதிலிகளுக்கான இந்தியப் பிரஜாவுரிமை...! விஜய்யிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
ஈழத் தமிழர்கள் தம்மைத் தாமே ஆளும் உரிமையைத் தமிழக அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் வன்னி அரசு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசாங்கம் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஏதிலிகள்
அத்தோடு, தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை ஏதிலிகளுக்கு இந்தியப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுக்கத் தமிழக அரசாங்கம் முழு முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இலங்கை மற்றும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வை வழங்கவும் தமிழக அரசாங்கம் முன்னின்று செயற்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |