நீர் வழங்கல் சபை மக்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தற்போதைய வானிலை காரணமாக நீர் விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகள் தொடர்பில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த நாட்களில் நாட்டில் நிலவும் மிகவும் வறண்ட வானிலை காரணமாக நீர் ஆதாரங்களில் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவதாகவும், வெப்பம் காரணமாக மக்களின் நீர் நுகர்வு மிக அதிகமாக இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை
இந்த நிலையில், குடிநீர் விநியோகம் குறைவாக இருப்பதால், அனைவரின் அத்தியாவசிய குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைகளுக்கும் சமமாக விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் சபை தெரிவித்துள்ளது.
எனவே, வாகனங்களை கழுவுதல், தோட்டக்கலை போன்ற நடவடிக்கைகளுக்கு நீரைப் பயன்படுத்துவதைக் குறைத்து, தேவையான அன்றாட நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.
குடிநீர் தேவை
இதுபோன்ற சூழ்நிலைகளில், நுகர்வோர் மக்களின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மேட்டு நிலப் பகுதிகளில் உள்ள நீர் நுகர்வோருக்கு தண்ணீரை விநியோகிக்கும்போது குறைந்த அழுத்தம் ஏற்படக்கூடும் என்றும் குறிப்பிடப்படுகிறது.
இருப்பினும், இந்த வறண்ட வானிலை காரணமாக பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாகவும் இந்த நேரத்தில் குடிநீரை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு சபை நுகர்வோரை கேட்டுக்கொள்கிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
