அரிசி நெருக்கடிக்கு யார் காரணம் : ஆலை உரிமையாளரின் குற்றச்சாட்டு நிராகரிப்பு
சந்தையில் அவ்வப்போது உருவாகும் அரிசி நெருக்கடிக்கு அரசாங்கங்களே பொறுப்பு என பாரிய அரிசி வியாபாரி டட்லி சிறிசேன(Dudley Sirisena) நேற்று (02) முன்வைத்த கருத்து முற்றிலும் பொய்யானது என முன்னாள் விவசாயப் பணிப்பாளர் கே.பி. குணரத்ன தெரிவித்தார்.
டட்லி சிறிசேன உள்ளிட்ட ஐந்து பாரிய ஆலை உரிமையாளர்கள் இந்த அரிசி நெருக்கடியை அவ்வப்போது ஏற்படுத்தி வருவதாக அவர் இன்று (03) குற்றம்சாட்டினார்.
ஜனாதிபதி அநுரவின் அறிவிப்பு
கடந்த காலங்களில் சந்தையில் கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் அரிசி விற்பனை செய்யப்பட்டதுடன் குறிப்பிட்ட வகை அரிசிகளுக்கு தட்டுப்பாடும் காணப்பட்டது.

இதன்படி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (anura kumara dissanayake)ஒக்டோபர் 24 ஆம் திகதி பாரிய அரிசி உற்பத்தியாளர்களை அழைத்து கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யுமாறு அறிவித்ததுடன் அவர்களும் அதற்கு இணக்கம் தெரிவித்தனர்.
ஆனால் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும்,அரிசி கட்டுப்பாட்டு விலைக்கு விற்கப்படுவதில்லை என்றும் வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர்.
கையளிக்கப்படாத அறிக்கை
இதேவேளை, நெல் மற்றும் அரிசி கையிருப்பு தொடர்பான தரவு அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டு ஒருவாரம் கடந்துள்ள போதிலும், அந்த அறிக்கை இதுவரை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக அமைச்சின் செயலாளர் எம்.எம். நயிமுதீன் நெல் இருப்பு தொடர்பான தரவு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அது நவம்பர் 6 ஆம் திகதி ஜனாதிபதியிடம் வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 18 மணி நேரம் முன்