பொதி செய்யப்பட்ட அரிசி தொடர்பான விசேட அறிவிப்பு..!
சந்தையில் பொதி செய்யப்பட்ட பெரும்பாலான உள்ளூர் அரிசிகளின் நிகர எடை குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.
பதுளை மாவட்டத்தின் பல்பொருள் அங்காடிகளில் நடத்தப்பட்ட தேடுதலில் இது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்ளுர் அரிசிப் பொதிகளில் இந்த நிலைமை காணப்படுகின்ற போதிலும், இறக்குமதி செய்யப்படும் அரிசிப் பொதிகளின் எடையில் எவ்வித வித்தியாசமும் இல்லை என பதுளை மாவட்ட உதவி அளவீட்டு அலகு சேவை அத்தியட்சகர் தெரிவித்தார்.
முட்டைகளை இறக்குமதி
இதேவேளை, நாட்டில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை துறைமுகத்தில் சிறைபிடிக்கும் அதிகாரிகளுக்கு எதிராக மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்று (25) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில், இந்த முட்டை கையிருப்புகளை விடுவிக்க அதிகாரிகள் இதுவரை தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
இந்த நாட்டில் முட்டையின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் அண்மையில் தீர்மானித்துள்ளது.
நடவடிக்கை
அதன்படி, இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி முட்டை கடந்த வியாழன் காலை நாட்டை வந்தடைந்தது.
சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் இருப்பு வெளியிடப்பட உள்ளதுடன், அரிசிகளின் நிகர எடை விசாரணைகளுக்கு அதிகாரிகள் 3 நாட்கள் கால அவகாசம் கோரியுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அது தொடர்பான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் இன்று குறிப்பிட்டுள்ளார்.
