திருடனின் நூதன செயல்! பொது மக்களுக்கு எச்சரிக்கை தகவல்
நிட்டம்புவை - பஸ்யாலை பிரதேசத்தில் இன்று வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 5 கோடி ரூபாய் பெறுமதியான பஜிரோ வண்டியை திருடிச் சென்றுள்ளதாக நிட்டம்புவை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நிட்டம்புவை நகரில் வாகன விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரின் வாகனமே இவ்வாறு திருடிச் செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டின் ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் புகுந்துள்ள திருடன், சாவிகள் மாட்டி வைக்கும் இடத்தில் இருந்து வண்டி சாவியை எடுத்து, பஜிரோவை கொள்ளையிட்டு சென்றுள்ளமை காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் போது தெரியவந்துள்ளது.
கொள்ளை நடந்த நேரத்தில் வீட்டில் இருந்தவர்கள் உறங்கியுள்ளனர். பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ள காட்சியின்படி சந்தேக நபர் கொழும்பு - கண்டி பிரதான வீதி ஊடாக கொழும்பு திசை நோக்கி வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.