மட்டக்களப்பு - அம்பாறைக்கு தனியாக பிரயாணிப்பவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு - அம்பாறைக்கு தனியாக பேருந்துகளில் பிரயாணிக்கும் பிரயாணிகளுக்கு மயக்கமருந்து கலந்த லெமன்பெப் பிஸ்கட் வழங்கி கொள்ளைகள் இடம்பெற்று வருகின்றன.
தனியாக பிரயாணிப்பவர்கள் அறிமுகம் இல்லாதவர்களிடம் பிஸ்கட் வாங்கி சாப்பிட வேண்டாம் என்பதுடன் பொதுமக்கள் கொள்ளையர்களிடம் அவதானமாக இருக்குமாறு கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு பிரயாணிக்கும் பேருந்துகளில் பிரயாணிகள் போல பிரயாணிக்கும் கொள்ளையர்கள் தனியாக யார் பிரயாணிக்கின்றனர் என நோட்டமிட்டு பின்னர் அவர்களுக்கு அருகில் சென்று பேச்சு கொடுத்துவிட்டு அவர்களுக்கு தமது பையில் இருந்து கவர் உடையாத மயக்க மருந்து கலந்த லெமன்பப் பிஸ்கட்டை எடுத்து கொடுப்பார்கள், அதனை உடைத்து சாப்பிட்டதும் சிறிது நேரத்தில் மயக்கம் வந்துவிடும்.
காவல்நிலையங்களில் முறைப்பாடு
அதன் பின்னர் அவர்கள் அணிந்திருக்கும் காப்பு மோதிரம், சங்கிலி, போன்ற தங்க ஆபரணங்கள் மற்றும் அவர்களுது கைபையில் இருக்கும் பணம் என்பவற்றை கொள்ளையடித்து கொண்டு ஏதாவது ஒரு இடத்தில் இறங்கி விடுவார்கள் மயக்கமடைந்தவர்கள் பின்னர் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டு 3 தினங்களுக்கு பின்னர்தான் சுயநிலைக்கு வருகின்றனர்.

இவ்வாறு அண்மை காலமாக பேருந்துகளில் பிரயாணித்த பலரிடம் கொள்ளைகள் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் காவல்நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
எனவே குறித்த மாவட்டங்களில் இருந்து தனியாக பிரயாணம் செய்வர்கள் அறிமுகம் இல்லாதவர்களிடம் எதையும் வாங்கி சாப்பிடகூடாது என்பதுடன் பொதுமக்கள் விழிப்பாகவும் அவதானமாகவும் செய்பட வேண்டும்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |