500 ஆவது நாளில் ரஷ்யா உக்ரைன் போர்
உலகையே உலுக்கிய ரஷ்யா உக்ரைன் போர் ஆரம்பித்து தற்போது 500 நாட்கள் நிறைவடைந்துள்ளன.
இப்போரில் இதுவரையிலும் 500 சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் 9000 பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
போர் ஆரம்பித்து 500 நாட்கள் ஆகியுள்ள நிலையிலும் அதனை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புக்கள் எதுவும் தென்படவில்லை என நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேற்குலக நாடுகளின் உதவி
ரஷ்யா உக்ரைன் போரை முடிவிற்கு கொண்டு வர சீனா துருக்கி போன்ற நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டாலும், தங்கள் முடிவுகளில் இருந்து துளியளவும் பின்வாங்க இவ்விரு நாடுகளும் முன்வராத நிலையில் அம்முயற்சிகளில் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.
ஒரு புறம் இப்போருக்கு வித்திட்ட மேற்குலக நாடுகள் உக்ரைனுக்கு கோடி கணக்கான டொலர் மதிப்புள்ள ஆயுதங்களை அளித்து வருகின்றன.
இவ்வாறான செயற்பாடுகள் மோதலில் உயிரிழப்புக்களை அதிகரிக்குமே தவிர போரை எந்நிலையிலும் முடிவுக்கு கொண்டு வர உதவப் போவது கிடையாது என ரஷ்யா விமர்சனங்களை தெரிவித்து வருகின்றது.
