உக்ரைனில் ரஷ்யாவின் அதிரடி தாக்குதல்
உக்ரைனில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா நடத்திய தாக்குதலால் கார்கிவ் நகரில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, 21 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக உக்ரைன் மீது தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளதுள்ள நிலையில் இதன் காரணமாக, இவ்விரு நாடுகளும் சமாதான ஒப்பந்தத்தை விரைவில் எட்டும் என்ற நம்பிக்கை குறைந்துள்ளது.
விமானப்படை
சமீபத்தில் உக்ரைன், ரஷ்யாவின் விமானத் தளங்களில் திடீரென ட்ரோன் தாக்குதல்களை நடத்தி அதிர்ச்சி அளித்த நிலையில் அதை தொடர்ந்து, ரஷ்யா ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் உக்ரைனின் கார்கிவ் நகரத்தைத் தாக்கியதில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக உக்ரைன் விமானப்படை அதிகாரிகள் தெரிவிக்கையில், “உக்ரைனின் கிழக்கு நகரமான கார்கிவ் மீது ரஷ்யா பல ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியது.
பாதுகாப்பு படைகள்
இதில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டு, 21 பேர் காயமடைந்துள்ள நிலையில் இது, ரஷ்யாவின் பெரும் தாக்குதல்களில் ஒன்றாகும்.
இந்த மூன்று ஆண்டு போரில் ரஷ்யாவின் கொடூரமான தாக்குதல் உத்தியின் ஒரு பகுதியாக மாறியுள்ளது.
ரஷ்யா இரவு முழுவதும் 215 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியது இதில், உக்ரைனின் விமான பாதுகாப்பு படைகள் 87 ட்ரோன்கள் மற்றும் ஏழு ஏவுகணைகளைத் தடுத்து சுட்டு வீழ்த்தியது” என தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
