இஸ்ரேல் - ஈரான் போரில் தானாக சிக்கிய ரஷ்யா: தப்புவாரா புடின்
ஈரானில் இஸ்ரேல் இதுவரை தாக்காத முக்கியமான அணுஉலையான புஷேர் அணுஉலையில் ரஷ்ய நாட்டவர்கள் பணியாற்றி வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
2005ஆம் ஆண்டு ரஷ்யா கட்டும் பணியைத் தொடங்கி, 2011ஆம் ஆண்டு இந்த உலை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு அமெரிக்க, இஸ்ரேல் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வரும் சூழ்நிலையில், ரஷ்யாவின் இந்த அணுஉலை ஈரானுக்கு முக்கிய பங்காற்றி வருகிறது.
புடினின் மத்தியஸ்த முயற்சி
இரு நாடுகளும் தற்போது 20 வருட மூலதன ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ரஷ்யா மேலும் குறைந்தது மூன்று அணுஉலைகள் ஈரானில் கட்ட முன்வந்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள், ரஷ்ய நாட்டவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை.
அந்த காரணத்தினாலேயே புடின், டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு மற்றும் ஈரான் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவுக்கு பாதிப்பு
இந்த நிலையில், தற்போதைய சூழ்நிலையில் ஈரான் முழுமையாக வீழ்வது ரஷ்யாவுக்கும் பாதிப்பு என்பதால், நிலைமை கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய அவசியத்தை புடின் வலியுறுத்தி வருகிறார்.
முன்னதாக ரஷ்ய ஜனாதிபதி புடின், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான அணுசக்தி விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய முன்வந்ததை ட்ரம்ப கடுமையாக கேலி செய்து விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
