முதுகெலும்பிருந்தால் தேர்தலை நடத்துக! ரணிலுக்கு சஜித் சவால்
தேர்தல் மூலமே நாம் ஆட்சிக்கு வருவோம், தற்போதைய அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லை, அவ்வாறு முதுகெலும்பு இருந்தால் தேர்தல் ஒன்றை நடத்துங்கள், என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலம் அன்றி மக்கள் அனுமதியுடனயே ஆட்சிக்கு வருவோம். மக்கள் ஆசிர்வாதத்தின் ஊடாகவே நாம் ஆட்சிக்கு வருவோம் என்பதை இந்த ரணில் ராஜபக்ச அரசாங்கத்திடம் கூறுகிறோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ரணில் ராஜபக்ச அரசாங்கம் மக்கள் வெள்ளத்திற்கு பயந்து விட்டனர், இது கோழைத்தனமான அரசாங்கமாகும், இது முதுகெலும்பு இல்லாத அரசாங்கம் என அவர் கூறினார்.
நாங்கள் சட்டத்தை மீறவில்லை. இவ்விடத்திற்கு ஒன்று திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் அடிப்படை உரிமைகளை,மனித உரிமைகளை, வேண்டுமேன்றே மீறினர்.
ரணில் ராஜபக்ச அரசாங்கத்தின் ரணிலுக்கும் மஹிந்தவிற்கும் முதுகெலும்பு இருந்தால் மக்கள் மத்தியில் வருமாறு அழைப்பு விடுக்கிறோம், என்றார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNAL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்