கோட்டாவை கைது செய்வதற்கான அரசியல் சதியே சுரேஸ் சலேயின் கைது : விமல் வீரவன்ச பகிரங்கம்
ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே போன்ற ஒரு புலனாய்வு அதிகாரியைக் கைது செய்ய முற்படுவதன் உண்மையான நோக்கம், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்வதற்கான சூழலை உருவாக்குவதே எனத் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (27) நடைபெற்ற "சலே என்ன செய்தார்" எனும் தலைப்பிலான விசேட கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், சுரேஷ் சலேயைக் கைது செய்ய எடுக்கும் முயற்சியானது, நாட்டின் தேசிய பாதுகாப்பையும் அரச இயந்திரத்தின் இருப்பையும் சீர்குலைப்பதற்கான ஒரு அரசியல் நடவடிக்கை.
புலம்பெயர் அமைப்புகளின் தேவை
இந்தக் கைது தமிழ் புலம்பெயர் அமைப்புகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக முன்னெடுக்கப்படும் ஒரு திட்டமிட்ட நகர்வு.

சுரேஷ் சலே யுத்த காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய தலைவரான தமிழ்ச்செல்வன் போன்ற இலக்குகளை வெற்றிகரமாகத் தாக்குவதற்குத் தேவையான துல்லியமான புலனாய்வுத் தகவல்களை வழங்கினார்.
இவ்வாறு நாட்டுக்காகப் பாரிய சேவையாற்றிய ஒரு அதிகாரியை இவ்வாறு வேட்டையாடுவதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்” என விமல் வீரவன்ச மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |