மூத்த தலைவர் சம்பந்தனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த டக்ளஸ்
''கொள்கை வேறு, கோட்டை வேறு, ஆனாலும் அஞ்சலிகள்!'' என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda ) இரா.சம்பந்தனின் (R.Sampanthan) மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இரா.சம்பந்தனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்ட இரங்கல் அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ”தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் வயதில் எமக்கு மூத்தவர்.
அரசியல் தளத்தில் பயணித்தவர்
கொள்கை வேறு, கோட்டை வேறாக இருப்பினும் அரசியல் தளத்தில் எம்முடனும் சம காலத்தில் பயணித்தவர்.
முரண்பாடுகள் இருப்பினும் காணும் பொழுதுகளில் அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதுண்டு.
வயது மூப்பின் காரணமாக அவர் மரணித்திருந்தாலும் அச்செய்தி துயரை தந்துள்ளது.
அவரது இழப்பில் துயருறும் சகலருக்கும் ஆறுதல் கூறுகின்றேன், அஞ்சலி மரியாதை '' என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![Gallery](https://cdn.ibcstack.com/article/35643380-2945-4f04-8cf9-edad8a80ff88/24-66825aa6587c1.webp)
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)