மெகசின் சிறைக்கலவரத்தில் உயிரிழந்தவர் குறித்து வெளியான தகவல்!
பொரளை மெகசின் சிறைச்சாலையில் கடந்த 06ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 11 பேர் காயமடைந்துள்ள நிலையில் உயிரிழந்தவர் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் ஹோமாகம, கட்டுவான பகுதியைச் சேர்ந்த 35 வயதான மொஹமட் அஸ்மான் ஷெரிப்டீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கல்கிஸ்ஸை பகுதியில் இடம்பெற்ற இரட்டை மரண சம்பவம் மற்றும் நீர்கொழும்பில் இடம்பெற்ற இரட்டை மரண சம்பவம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ மரணம்
மேலும், ‘ஹோமாகம ஹந்தயா’ என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவுடன் தொடர்புடைய ஒருவரின் ஒப்பந்த துப்பாக்கிதாரியாக அவர் செயற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக காலி, அம்பாறை, நீர்கொழும்பு மற்றும் ஹோமாகம உள்ளிட்ட பல நீதிமன்றங்களில் அவருக்கு எதிராக வழக்குகள் நிலுவையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கணேமுல்ல சஞ்சீவ மரணம் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புகள் அல்லது இறுதி சட்ட முடிவுகள் குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |