இன்று வெளிவருமா புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு?
result
exam
scholarship
By Vanan
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றை இன்றைய தினத்துக்குள் வெளியிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன (L.M.T. Dharmasena) கூறியுள்ளார்.
நேற்றையதினம் பரீட்சை பெறுபேற்றை வெளியிட கல்வி அமைச்சர் தினேஸ் குணவரத்ன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
ஆயினும், பெறுபேறுகள் நேற்று வெளியாகவில்லை. 2021ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரீசில் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், அதில் 340,508 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
இப்பரீட்சை 2,943 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.