பாடசாலை மாணவனை தலைக்கவசத்தால் அடித்துக் கொன்ற சக மாணவர்கள்
பாடசாலை மாணவன் ஒருவன் தலைக்கவசத்தால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சக மாணவர்கள் 11பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலிகெதர காவல் பிரிவுக்குட்பட்ட அரபோல கந்த பகுதியில் நேற்று (22) இரவு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள்
காவல்துறையினரின் தகவலின்படி, சந்தேக நபர்கள் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள், அரபோல கந்த மற்றும் அம்பகோட்டே பகுதிகளைச் சேர்ந்தவர்கள், உயிரிழந்த மாணவனின் சக பள்ளி மாணவர்கள்.
வெலிகெதர காவல் பிரிவுக்குட்பட்ட ஹெவன்பொல பகுதியில் ஏப்ரல் 16 ஆம் திகதி மாணவர்கள் குழு ஒன்று மற்றொரு மாணவனைஅடித்து, உதைத்து, தலைக்கவசங்களைப் பயன்படுத்தி தாக்கியதாகக் கூறப்படுகிறது.
குருநாகல் மருத்துவமனையில் மாணவன் உயிரிழப்பு
பலத்த காயமடைந்த பாதிக்கப்பட்ட மாணவன் குருநாகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று(22) உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் ஹெவன்பொல, சாகரெலிய வட்டத்தைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் குருநாகல் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மாவதகம மற்றும் வெலிகெதர காவல்துறையினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
