பெண் தனியாக இருந்த வீட்டில் அத்துமீறி நுழைந்த துணை அமைச்சரின் செயலாளர் :பின்னர் நடந்த விபரீதம்
தேசிய மக்கள் சக்தி(npp) அரசாங்கத்தின் துணை அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஒருவர், பெண் ஒருவர் தனியாக இருந்த ஒரு வீட்டில் வலுக்கட்டாயமாக நுழைந்து சட்டவிரோதச் செயலைச் செய்யச் சென்றபோது, அவரைப் பெண்கள் அடித்துக் கட்டிப் போட்டு போகஸ்வெவ காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பெண்களால் தாக்கப்பட்ட நபர் வன்னி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் துணை அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அதிகாரி
ஜே.வி.பி.யின் வன்னி மாவட்டக் குழுவின் அதிகாரியான இந்த நபர், வவுனியாவின் நந்திமித்ரகம பகுதியில் ஒரு பெண் மட்டுமே வசித்து வந்த வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தார், வீட்டின் உரிமையாளரான பெண் வீட்டின் பின்புறக் கதவு ஊடாக வெளியே ஓடி வந்து அண்டை வீட்டாரிடம் உதவி கேட்டு அலறினார்.
அந்த நேரத்தில், அக்கம் பக்கத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் வந்து அந்த நபரைப் பிடித்தனர், அந்த நபரும் அதற்குள் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தார்.
பெண்கள் அவரை அடித்து,காவல்துறையிடம் ஒப்படைத்தனர்
கிராமத்தின் பெண்கள் அந்த நபரை அடித்து, கயிறுகளால் கட்டி, போகஸ்வெவ காவல்துறையிடம் ஒப்படைத்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
எனினும், சந்தேகத்திற்குரிய ஒருங்கிணைப்பு செயலாளர் போகஸ்வெவ காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், தேசிய மக்கள் சக்தியின் ஒரு குழு தலையிட்டு அந்த நபரை விடுவிக்க நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது ன அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்
