கௌதாரிமுனையில் நிலை கொள்ளும் வல்லரசுகள் - இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்!
கௌதாரிமுனையில் வல்லரசு நாடுகள் நிலைகொள்வதால் இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என பிரித்தானியாவிலிருக்க கூடிய அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து கூறுகையில்,
“கௌதாரிமுனை பகுதியில் கடல்வள அபிவிருத்தி என்ற அடிப்படையில் இரால் பண்ணைகளும், கடலட்டை பண்ணைகளும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
உளவு பார்ப்பதற்கான நடவடிக்கை
கௌதாரிமுனையை நோக்கி ஒரு ஆழ்கடல் பகுதி இருக்கிறது. கௌதாரிமுனையை அண்டி பெரும் கப்பல்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதாவது நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடைப்பட்ட கடற்பரப்பு மிக ஆழமானது. அதிலிருந்து இங்கே வரலாம்.
இங்கே ஒரு கடற்படை தளம் அமைப்பதற்கான முயற்சிகளின் முன்னோடிகள் தான் இங்கே நடக்கின்றன. அத்துடன் கௌதாரிமுனை இந்தியாவிற்கு மிக அண்மித்த பகுதி.
இந்தியாவிற்கான விரைவான போக்குவரத்திற்கான ஒரு பகுதியாக இந்த இடம் இருந்திருக்கிறது. எல்லா வல்லரசுகளும் இந்த பகுதியிலே நிலை கொள்வதன் மூலம் இந்தியாவிற்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும்.
இந்தியாவை உளவு பார்ப்பதற்கான நடவடிக்கையாகவும் இது அமையக்கூடும் என கூறியுள்ளார்.
இரகசிய ஆய்வு
கேள்வி - கிளிநொச்சி பொன்னவளி பகுதியில் மக்களிடம் மறைமுக கையெழுத்து வாங்கப்படுகிறது. இரகசியமாக புராதன தகவல்கள் சேகரிக்கப்படுகிறது என யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குறிப்பிட்டார்.
கடந்த 6 ஆண்டுகளாக இவ்விடத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. பெரும்பான்மையினத்தவர் தான் இந்த ஆய்வினை செய்கின்றனர். நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமா? இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
பதில் - குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் பதில் பொறுப்பற்றது. அவ்வாறான அறிக்கைகளை அவர் சட்டரீதியாக பெற முடியும். அவரின் பதில் கேலிக்குரியது.
இதற்கான ஆவணங்கள் அவர்களிடத்தில் உள்ளது. இவர்கள் ஊடகங்களுக்கு சாட்டுப்போக்கு சொல்கின்றனர்." என தெரிவித்தார்