கிடைத்தது இரகசிய தகவல்: தமிழர் தலைநகரில் ஒருவர் கைது
திருகோணமலை (Trincomalee) திருக்கோணேஸ்வரர் ஆலய கடை தொகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (23) மாலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை - மிகிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
பிணையில் விடுவிப்பு
காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் திருக்கோணேஸ்வரர் கோயில் கடைத் தொகுதியில் இளநீர் விற்பனையில் ஈடுபட்டு வந்தவரே இவ்வாறு ஒரு போத்தல் கசிப்புடன் கைதாகியுள்ளார்.
அதன்படி, 15 போத்தல்களில் 14 போத்தல்களை விற்பனை செய்துள்ள நிலையில் எஞ்சியுள்ள ஒரு போத்தலுடன் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் நாளை (25) திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |