சந்நிதியானை தரிசிக்க செல்வோருக்கு முக்கிய தகவல்
தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய பெருந்திருவிழா இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், J258 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அனுமதியளிக்கப்படாத எவரும் ஆலயத்துக்குச் செல்ல முடியாத நிலையில் இன்று ஆலயத்துக்குச் சென்ற பல நூற்றுக் கணக்கான பக்தர்கள் பொலிஸாரினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய கொடியேற்றம் இன்று இரவு 8.00 மணிக்கு இடம்பெறவுள்ளதுடன், உள்வீதியில் திருவிழாவை நடத்தவும் ஒரே நேரத்தில் 100 அடியவர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலர், சுகாதார மருத்துவ அதிகாரியின் வழிகாட்டுதலில் ஆலயத்துக்கு மிக வேண்டியவர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டவர்கள் மாத்திரமே ஆலயத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.





















