14 வயது மாணவியை வன்புணர்விற்குட்படுத்திய 17 வயது காதலன் - யாழில் சம்பவம்
யாழ்ப்பாணத்தில் 14 வயது மாணவியை வன்புணர்வுக்குட்படுத்திய 17 வயது காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் 14 வயது மாணவி ஒருவர் பாடசாலைக்கு செல்வதாக கூறி தனது காதலனுடன் சென்றுள்ளார்.
அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் கலாச்சார சீர்கேடுகள் அதிகம் இடம்பெறுவதாக பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்ட இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு மாணவியை காதலன் வன்புணர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
காதலன் கைது
இதேவேளை, மாணவியை காணவில்லை என்று தயார் காவல்துறையினரிடம் கொடுத்த முறைப்பாட்டிற்கு அமைய தேடுதல் நடத்திய காவல்துறையினர் குறித்த மாணவியை மீட்டுள்ளார்.
அவர் மருத்துவ பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இதன் போது அவர் காதலனால் வன்புணரப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து காதலன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
