ராஜபக்சர்கள் மீது குற்றம் சுமத்த முயற்சிக்கும் அநுர அரசு : பொங்கியெழுந்த நாமல்

SLPP Anura Kumara Dissanayaka Namal Rajapaksa Rajapaksa Family NPP Government
By Sathangani Sep 17, 2025 03:38 AM GMT
Report

சுங்கத்தில் இருந்து 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரத்தில் உண்மையான விடயத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

அத்துடன் போதைப்பொருள் விவகாரத்தையும் ராஜபக்சர்கள் மீது சுமத்த அரசாங்கம் முயற்சிக்கிறது என நாமல் மேலும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, ”எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களை இலக்கு வைத்து குறிப்பாக எமது கட்சியின் உறுப்பினர்களை இலக்கு வைத்து அரசாங்கம் முறையற்ற வகையில் செயற்படுகிறது.

யாழில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்: காவல்துறையினர் மீது தாக்குதல்: இருவர் காயம்

யாழில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்: காவல்துறையினர் மீது தாக்குதல்: இருவர் காயம்

போதைப்பொருள் விவகாரம்

அண்மையில் தெற்கு மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கமும் இதனை தனது அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்கிறது.

ராஜபக்சர்கள் மீது குற்றம் சுமத்த முயற்சிக்கும் அநுர அரசு : பொங்கியெழுந்த நாமல் | Anura Govt Is Trying To Blame The Rajapaksas Namal

இந்த கொள்கலன்கள் சுங்கத்தில் இருந்து தான் விடுவிக்கப்பட்டுள்ளது. வானத்தில் இருந்து ஒன்றும் விழவில்லை. ஆகவே இந்த கொள்கலன் விடுப்பு தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும்.

சுங்கத்தில் இருந்து 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரத்தில் சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சொல்வது உண்மையா, காவல்துறைமா அதிபர் சொல்வது உண்மையா என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.

அரசியலுக்கு வருவதற்கு இது ஒரு தடையா.! அரசாங்கம் அறிவிப்பு

அரசியலுக்கு வருவதற்கு இது ஒரு தடையா.! அரசாங்கம் அறிவிப்பு

குற்றஞ்சாட்டிய அரசாங்கம்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுக்கும், ராஜபக்சர்களுக்கும் தொடர்புண்டு என்று அரசாங்கம் தேர்தல் மேடைகளில் குற்றஞ்சாட்டியது. ஆனால் இதுவரையில் அந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை.

ராஜபக்சர்கள் மீது குற்றம் சுமத்த முயற்சிக்கும் அநுர அரசு : பொங்கியெழுந்த நாமல் | Anura Govt Is Trying To Blame The Rajapaksas Namal

தற்போது போதைப்பொருள் விவகாரத்துக்கும் ராஜபக்சர்களுக்கும் தொடர்புண்டு என்று குறிப்பிடப்படுகிறது. குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை போன்று அவற்றை ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும்“ என தெரிவித்தார்.

ஆறு முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக முறைப்பாடு: உடனடி விசாரணைக்கு வலியுறுத்து

ஆறு முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக முறைப்பாடு: உடனடி விசாரணைக்கு வலியுறுத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024