சாராவை மறைத்து வைத்துள்ள அரசாங்கம்! எதிர்க்கட்சி கடும் குற்றச்சாட்டு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரனை தற்போதைய அரசாங்கமே மறைத்து வைத்துள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் ஹெக்டர் ஹப்புஹாமி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
''தற்போதைய அரசாங்கமே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் இந்தியாவில் இருப்பதாக கூறியிருந்தனர்.

ஆனால் இப்போது இல்லை என்பது எந்த விதத்தில் நியாயம். உண்மையான குற்றவாளி எங்கு உள்ளார் என்பதை அறிந்தும் காலத்தின் தேவைக்காக அதனை மறைக்கின்றீர்கள்.
சாராவை நீங்களே மறைத்து வைத்துள்ளீர்கள். இது வழக்கு துரிதமாக நிறைவு பெறுவதை தடுக்கிறது. சூத்திரதாரியை மறைத்து வைத்துள்ளீர்கள்” என தெரிவித்திருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |