இலங்கை வரும் கப்பல் மேலும் தாமதமாகும்! ஏற்பட்ட புதிய சிக்கல்
Sri Lanka Economic Crisis
Ministry of Agriculture
By Kanna
இன்று கொழும்பு வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்ட யூரியா உரக் கப்பல் வருகை மேலும் தாமதமாகும் என கொமர்ஷல் உர நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த கப்பல் எதிர்வரும் 9 ஆம் திகதி இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என வர்த்தக உர நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கடற்காற்றின் தாக்கம்
ஓமானில் உள்ள ‘சௌ ஓமன்’ என்ற துறைமுகத்தில் இருந்து கடந்த 03ஆம் திகதி புறப்பட்ட குறித்த உர கப்பல் இன்று இலங்கையை வந்தடையும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நிலவும் கடும் காற்றின் தாக்கம் காரணமாக யூரியா உரக் கப்பல் 9ஆம் திகதி இரவு இலங்கையை வந்தடையும் என குறிப்பிடப்படுகின்றது.
இந்த கப்பலில் 40 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியாவுடன் இலங்கை வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 12 மணி நேரம் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்