கொழும்பு வாழ் மக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
கொழும்பில் வாழும் மக்கள் தொடர்பில் வெளியான தகவல்
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் கொழும்பில் வாழும் மக்கள் தொடர்பில் இன்று வெளியான தகவல் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன்படி கொழும்பு மாவட்டத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மோசமான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நகர் மற்றும் கிராமப் புறங்களில் போதைப்பொருள் பாவனை தீவிரமாக அதிகரித்துள்ளது.
அந்த வகையில் மாளிகாவத்தை, கொலன்னாவ மற்றும் வனாத்தமுல்ல ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் பாவனை பாரதூரமான முறையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்க விசேட சட்டம் இயற்றப்பட வேண்டும் என எதிர்தரப்பின் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

