பதுளையில் துப்பாக்கிசூடு : கர்ப்பவதி படுகாயம்
Badulla
Pregnancy
Sri Lanka Police Investigation
Gun Shooting
By Jaso
பதுளை(badulla), ஹிடகொட பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (31) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பிள்ளைகளின் தாய் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிளின்ட்லாக் ரக துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும், சுமார் 3 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கர்ப்பவதி படுகாயம்
இரண்டு பிள்ளைகளின் தாயான 33 வயதான பெண் கர்ப்பவதி எனவும், அவரது இடது கையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபரின் காரில் கைக்குண்டு ஒன்று காணப்பட்டதாகவும், சந்தேகநபரின் காரும் துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட பிளின்ட் ரக துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி