ஈழத்தமிழர்களின் சுதந்திரத்திற்காக எட்டு தசாப்தங்களாக நடக்கும் போராட்டம் : சிறீதரன் சுட்டிக்காட்டு

Sri Lankan Tamils Jaffna Sri Lankan political crisis Election
By Sathangani Jul 22, 2024 11:56 AM GMT
Report

ஈழத் தமிழினத்தின் இறையாண்மைக்கு நீதி வேண்டி நாங்கள் மேற்கொள்ளும் அறவழிப் போராட்டங்களையும் அபிலாஷை வெளிப்பாடுகளையும் சிங்கள தேசம் எப்போது புரிந்து கொள்ள தலைப்படுகின்றதோ அப்போதுதான் அர்த்தம் மிகுந்த இலங்கையை கட்டியெழுப்ப முடியும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (Shritharan) தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் நேற்று (21) இடம்பெற்ற தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் ”கடந்த எட்டு தசாப்தங்களுக்கு மேலாக ஈழத்தமிழர்களின் சுதந்திரத்திற்காக அவர்களின் இறையாண்மையை நிலைநிறுத்துவதற்காக சிங்கள பௌத்த ஒடுக்குமுறை ஆட்சியாளர்களுக்கு எதிராக இரத்தமும் சதையுமாக போராட்டம் நடைபெற்று வருகின்றது.

அதிபர் தேர்தல் : மொட்டு ரணில் தீர்க்கமான பேச்சு ஆரம்பம்

அதிபர் தேர்தல் : மொட்டு ரணில் தீர்க்கமான பேச்சு ஆரம்பம்

சிங்கள பௌத்த பேரினவாதம்

இந்த வலியின் நீட்சியில் உருவான ஈழத்தமிழர்களின் சுதந்திரத்திற்கான அரசியல் இயக்கங்களில் ஒன்றாக தன்னை கட்டமைத்துக் கொண்டுள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசியமாநாட்டில் உரையாற்றக் கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை காலத் தேவை கருதிய வரலாற்று சந்தர்ப்பங்களில் ஒன்றாகவே நான் பார்க்கின்றேன்.

ஈழத்தமிழர்களின் சுதந்திரத்திற்காக எட்டு தசாப்தங்களாக நடக்கும் போராட்டம் : சிறீதரன் சுட்டிக்காட்டு | Shritharan Speech In Tpa 1St National Conference

ஆத்மார்த்தமாக அரசியல் பண்பாட்டின் அடிப்படையில் புதிய உலக சூழ்நிலைகளை அனுசரித்தவாறு எமது இனத்தின் சமத்துவ வாழ்விற்கான பயணத்தை நாம் எல்லோரும் இணைந்து முன்னெடுக்க வேண்டும் என்ற காலக்கடமை எம் ஒவ்வொருவரது கரங்களிலும் தரப்பட்டிருக்கின்றது.

அரச இயந்திரத்தின் கொள்கை வகுப்பினையும் இனவாத நோக்கில் கட்டமைக்கப்பட்ட அதிகார பீடங்களின் செயல்முறைகளையும் நாங்கள் எச்சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதில் தெளிவுற்றுள்ளோம்.

இருந்த போதும் எமது அடிப்படை விருப்புகளை கூறுகின்ற எமது அரசியல் உரிமையின் மீது போர் தொடுக்கும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை தமிழ்தேசியம் எனும் ஒரு குடையின் கீழ் நின்று கூட்டாய் எதிர்க்கும் திராணியை உருவாக்குவதில் தான் இன்று தமிழினம் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது.

தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து

தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து

ஈழத்தமிழர்களின் குரல்

எட்டு தசாப்தங்கள் கடந்தும் நீர்த்துப் போகாத அரசியல் அபிலாஷைகளைக் கொண்டிருக்கின்ற ஈழத்தமிழர்களின் அடிப்படை மற்றும் அரசியல் உரித்துக்களை அங்கீகரித்து அர்த்தமுள்ள அரசியல் அதிகாரப் பகிர்வின் மூலம் இனச்சமத்துவத்தை அங்கீகரிக்கின்ற பொாருளாதார சபீட்சமுள்ள இலங்கையை கட்டியெழுப்புவதற்கு இலங்கை அரசு தொடர்ந்தும் தவறி வருகின்றது என்பதை பிராந்திய மற்றும் சர்வதேச அரசுகள் உணர்ந்து கொள்ளும் காலமும் நேரமும் நெருங்கிவந்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.

ஈழத்தமிழர்களின் சுதந்திரத்திற்காக எட்டு தசாப்தங்களாக நடக்கும் போராட்டம் : சிறீதரன் சுட்டிக்காட்டு | Shritharan Speech In Tpa 1St National Conference

இத்தகையதோர் சாதகத்தன்மை மிக்க அரசியல் சூழ்நிலையில் ஈழத்தமிழர்களின் குரலை தமிழ்தேசியம் எனும் இயங்குதளத்தில் நின்று கூட்டுக்குரலாக ஒருங்கிணைக்க வேண்டியது அவசியமானது.

தமிழ்த்தேசிய அரசியலில் குறுகிய மற்றும் நீண்டகால இலக்குகளை தீர்மானித்தல், சர்வதேச உறவுகளை மெய் நிலையில் வலுப்படுத்தல், இளைய தலைமுறை அரசியலாளர்களை வலுப்படுத்தல், மக்களை அரசியல் மயப்படுத்தல் , மக்களின் உணர்ச்சியையும் திரட்சியையும் ஒரு புள்ளியில் சந்திக்க வைத்தல் உள்ளிட்ட அரசியல் செல்நெறிகளை செயலுருப்பெற செய்ய வேண்டியுள்ளது.“ என தெரிவித்துள்ளார்.

இலங்கையின் திறைசேரியில் சேகரிக்கப்பட்டுள்ள பில்லியன் கணக்கிலான டொலர்கள்

இலங்கையின் திறைசேரியில் சேகரிக்கப்பட்டுள்ள பில்லியன் கணக்கிலான டொலர்கள்


இது தொடர்பான மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க.....  


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026