பொருளாதார நெருக்கடிக்கு எதிராக கையெழுத்து வேட்டை (படங்கள்)
வவுனியாவில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக 25 ஆயிரம் பேரின் கையெழுத்து பெறும் நோக்கில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினரினால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை இன்று இலுப்பையடி சந்தியில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த நடவடிக்கை சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பட்டினிச் சாவைத் தடுக்க மக்களே முன்வாரீர்
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண கோரி, பட்டினிச் சாவைத் தடுக்க மக்களே முன்வாரீர் எனும் தொனிப்பொருளில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக 25 ஆயிரம் பேரின் கையெழுத்து பெறும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் முதற்கட்டமாக வவுனியா இலுப்பையடி சந்தியில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், இந்த நடவடிக்கையில் இன, மொழி பேதங்களுக்கு அப்பால் பல மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கை
