தமது எல்லைகளை மீண்டும் திறப்பதாக சிங்கப்பூர் இன்று அறிவித்துள்ளது
India
Sri Lanka
Singapore
Covid - 19
By S P Thas
இலங்கை, பங்களாதேஷ் மற்றும் இந்தியா உட்பட ஆறு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு தமது எல்லைகளை மீண்டும் திறப்பதாக சிங்கப்பூர் இன்று அறிவித்துள்ளது.
இது இந்த நாடுகளின் கோவிட் நிலைமையை மறு ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம், இந்த முடிவை அறிவித்துள்ளது.
இதன்படி 2021, ஒக்டோபர் 26 ஆம் திகதி இரவு 11.59 மணி முதல், பங்களாதேஸ், இந்தியா, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் பயணிகள், சிங்கப்பூருக்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த பயணிகள் 4ஆம் வகை எல்லைக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இருப்பார்கள், இதில் 10-நாட்கள் வீடுகளிலேயே தங்கியிருத்தலும் அடங்கியுள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி