இஸ்ரேலை முட்டாளாக்கிய சின்வாரின் மனைவி: தப்பிச் சென்று துருக்கியில் மறுமணம்!
ஹமாஸ் இயக்கத்தின் முன்னாள் தலைவர் யஹ்யா சின்வாரின் மனைவி சமர் முஹம்மது அபூ ஸமர், அவரது குழந்தைகளுடன் காசாவில் இருந்து தப்பித்து துருக்கிக்கு சென்று அங்கு மறுமணம் செய்துகொண்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2011 ஆம் ஆண்டு சின்வாரை திருமணம் செய்துகொண்ட சமர், காசா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் தியாலஜி துறையில் முதுநிலை பட்டம் பெற்றவர்.
அவரும் குழந்தைகளும் போலி கடவுச்சீட்டு உதவியுடன் ரஃபா எல்லை வாயிலாக எகிப்து வழியாக வெளியேறியதாக கூறப்படுகிறது.
தப்பிக்கச் சென்ற நடவடிக்கை
அவர் காசாவில் இருந்து தப்பிக்கச் சென்ற நடவடிக்கைக்கு மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பு, கட்டமைப்பு மற்றும் பெருமளவிலான பணம் தேவைப்பட்டது என்றும், இது ஒரு சாதாரணக் காசா குடியரசு மகனுக்கு கிடைக்காத சாத்தியமற்ற உதவியுடன் நடந்துள்ளதும் என்றும் தெரியவந்துள்ளது.
இவர், வேறு ஒரு காசா பெண்ணின் கடவுச்சீட்டை பயன்படுத்தியதாகவும், அத்துடன் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவின் முக்கிய உறுப்பினர் பாத்தி ஹம்மாத், சமரின் துருக்கி திருமணத்தை ஏற்பாடு செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹம்மாத் முன்னதாகவே ஹமாஸ் உறுப்பினர்களின் குடும்பங்களை யுத்தப் பகுதிகளில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டவராக அறியப்பட்டுள்ளார்.
சின்வாரின் கொலை
மேலும், யஹ்யா சின்வாரின் சகோதரர் முகம்மதின் மனைவியான நஜ்வா அவரும் இதே போலி ஆவணத் திட்டம் மூலம் காசாவை விட்டு வெளியேறியுள்ளதாகவும், அவர் எங்கு இருக்கிறார் என்பதுபற்றி எந்த தகவலும் இல்லை என்றும் இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த இருவரும் தங்கள் கணவர்கள் கொல்லப்படுவதற்கு முன்னதாகவே ரஃபா எல்லி வழியாக வெளியேறியதை இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
2024 ஒக்டோபர் 16ஆம் திகதி, ரஃபாவின் தல்அல்-சுல்தான் பகுதியில் இடம்பெற்ற இஸ்ரேலின் தாக்குதலின் போது யஹ்யா சின்வார் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
